Home One Line P1 நாடு திரும்பிய நஸ்ரி அசிஸ் – ஒற்றுமை அரசாங்கத்தை நிராகரித்தார்

நாடு திரும்பிய நஸ்ரி அசிஸ் – ஒற்றுமை அரசாங்கத்தை நிராகரித்தார்

640
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த இரண்டு நாட்களாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாமன்னரைச் சந்தித்த வேளையில், வெளிநாட்டில் இருந்த அம்னோவின் பாடாங் ரிங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பினார்.

கட்சிக்காரர் என்ற முறையில் ஒற்றுமை அரசாங்கத்தைத் தான் நிராகரிப்பதாகக் கூறியிருக்கும் நஸ்ரி, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்கான கோரிக்கையைத் தான் ஆதரிப்பதாகவும் நஸ்ரி கூறினார்.