Home One Line P1 “மகாதீர் விலக வேண்டிய நேரம் வந்து விட்டது”- மக்களவைத் தலைவரின் அறிக்கைக்கு, காலிட் நோர்டின் இன்ஸ்டாவில்...

“மகாதீர் விலக வேண்டிய நேரம் வந்து விட்டது”- மக்களவைத் தலைவரின் அறிக்கைக்கு, காலிட் நோர்டின் இன்ஸ்டாவில் பதிவு!

626
0
SHARE
Ad
படம்: நன்றி என்எஸ்டிபி

கோலாலம்பூர்: மக்களவைத் தலைவர் வருகிற மார்ச் 2-ஆம் தேதி இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்திருந்த மக்களவை அமர்வை நிறுத்தியதை அடுத்து, முன்னாள் ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின் தமது இன்ஸ்டாகிராம் பதிவில், “துன் மகாதீருக்கான சமிக்ஞை வந்து விட்டது. அவர் செல்ல வேண்டிய நேரம் இது. மலேசியாவிற்கான சேவைகள் மற்றும் தியாகங்களுக்கு நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண அடுத்த வாரம் சிறப்பு அமர்வுக்கான மகாதீரின் அழைப்பை நிராகரித்த மக்களவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப்பின் அறிக்கையை அவர் சுட்டிக் காட்டி பதிவிட்டிருந்தார்.