Home One Line P1 அன்வார் அரண்மனையிலிருந்து வெளியேறினார், மெய்காப்பாளர்களுடன் ஊடகவியலாளர்கள் தள்ளு முள்ளு!

அன்வார் அரண்மனையிலிருந்து வெளியேறினார், மெய்காப்பாளர்களுடன் ஊடகவியலாளர்கள் தள்ளு முள்ளு!

571
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் 20 நிமிடத்திற்குப் பிறகு அரண்மனையிலிருந்து வெளியேறினார்.

அவருடன் பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி பாட்ஸிலும் இருந்தார்.

அவரது வாகனம் நிற்காமல் சென்றார், ஆனால் அன்வார் சன்னலைக் கீழே இறக்கி ஊடகவியலாளர்களுக்கு கைக் காட்டினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், பத்திரிகையாளர்கள் கேள்விகளைக் கேட்க முயற்சிக்கும்போது, அவரது மெய்க்காப்பாளர்கள் அவர்களை வாகனத்திலிருந்து விலக்க முயற்சித்தனர்.

தள்ளுதல் ஏற்பட்டு சில பத்திரிகையாளர்கள் தரையில் விழுந்தனர். கோபமடைந்த பத்திரிகையாளர்கள் அன்வாரின் மெய்க்காப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.