Home One Line P1 கொவிட்-19: சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு மக்கள் உதவ வேண்டும்! – மாமன்னர்

கொவிட்-19: சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு மக்கள் உதவ வேண்டும்! – மாமன்னர்

485
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு சுகாதார அமைச்சுக்கு உதவுவதில் மலேசியர்கள் தங்கள் பங்கை அளிக்குமாறு மாமன்னர் சுல்தான் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று நாட்டில் பதிவான கொரொனாவைரஸின் 28 புதிய வழக்குகள் குறித்து மாமன்னர் தனது கவலையை வெளிப்படுத்தியதாக இஸ்தானா நெகாராவின் முதன்மைக் கணக்காளர் அகமட் பாடில் ஷாம்சுடின் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, வைரஸ் பரவலை விரைவாகவும், திறம்படவும் கட்டுப்படுத்த உதவும் வகையில், புதிய நோயாளிகளை கண்டறியும் வகையில் அதன் விசாரணைகள் மற்றும் தொடர்புத் தடங்களில் சுகாதார அமைச்சகத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு மாமன்னர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

“ஏதேனும் தகவல்கள், கேள்விகள் தேவைப்பட்டால், சுகாதார அமைச்சின் வலைத்தளத்தின் மூலம்‘ மெய்நிகர் சுகாதார ஆலோசனை ’அல்லது நெருக்கடி தயாரிப்பு மற்றும் பதிலளிப்பு மையத்தை (சிபிஆர்சி) அணுகுமாறு மாமன்னர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்,” என்று அகமட் பாடில் கூறினார்.

வைரஸைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், அமைச்சகம் வழங்கிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்குமாறு மாமன்னர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.