Home One Line P1 மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப்பெறாது!- மகாதீர்

மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப்பெறாது!- மகாதீர்

1414
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறாது, ஏனெனில் மொகிதின் யாசின் தனது நிலையை வலுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் என்று மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை தேசிய கூட்டணியின் (பிஎன்) புதிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என்று முன்னாள் பிரதமருமான அவர் நம்புகிறார்.

“இது பொதுத் தேர்தல் வரை நீடிக்கும். இப்போது அவர் (மொகிதின்) அரசாங்கம் அமைத்தது , பலருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். எனது ஆதரவாளர்கள் சிலரை நான் கண்டேன், இப்போது அவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ”என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் 114 இடங்களைக் கொண்டிருந்தோம், ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது.”

“எனவே மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தாலும் அது சாத்தியப்படாது” என்று அவர் மேலும் கூறினார்.

“நிச்சயமாக அவர் ஓர் அமைச்சராக இருக்க வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர்கள் அதனை மறுப்பது கடினம். நான் அவர்களுக்கு எதுவும் வழங்க முடியாது. ”

இதற்கிடையில், பழைய அரசாங்கத்தின் கொள்கைகளை மொகிதின் தொடருவார் என்றும் மகாதீர் நம்பிக்கைத் தெரிவித்தார்.