Home One Line P1 நாடு, மக்கள் நலனுக்காக துன் மகாதீரை சந்திக்கத் தயார்! – மொகிதின்

நாடு, மக்கள் நலனுக்காக துன் மகாதீரை சந்திக்கத் தயார்! – மொகிதின்

498
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை  சந்திக்க தனது விருப்பத்தை வெளிப்படுத்தி  அவருக்கு  எழுதிய கடிதத்தின் உள்ளடக்கங்களை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று புதன்கிழமை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மொகிதின், டாக்டர் மகாதீரை எந்த நேரத்திலும், எங்கும் நாட்டின் சிறந்த நலனுக்காக சந்திக்கத் தயாராக இருப்பதாகக்  கூறினார்.

“முதலில், துன் (டாக்டர் மகாதீர்) மற்றும் அவரது குடும்பத்தினரின் நல்ல ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்தனை செய்து கொண்டேன். இரண்டாவதாக, கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் ஏதேனும் அவரது உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் எனது மன்னிப்பை தெரிவித்துக் கொண்டேன்.”

#TamilSchoolmychoice

“மூன்றாவதாக, அவருக்கு  நேரம் இருந்தால் அவரைச் சந்திக்க வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். இருப்பினும், சந்திப்பிற்கு நேரம் வரவில்லை என்று கூறி அவரது பதிலை நான் பெற்றேன், ”என்று அவர் கூறினார்.

டாக்டர் மகாதீர் புதிய அரசாங்கத்திற்கு ஒப்புதல் அளிக்க விரும்புவதாகவும் மொகிதின் கூறினார்.

“நாங்கள் இந்த அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம், துன் (டாக்டர் மகாதீர்) இந்த அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும், இது மக்களுக்கான அரசாங்கம். இது சட்டபூர்வமானது,  அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது, ”என்று அவர் கூறினார்.

தனது தலைமையின் கீழ் உள்ள அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தல் வரை நீடிக்கும் என்று கூறியதாக டாக்டர் மகாதீருக்கு நன்றி தெரிவிப்பதாக மொகிதின் கூறினார்.

மக்களின் நலனுக்காக பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை வலுப்படுத்துவதில் இப்போது கவனம் செலுத்துவதாக பிரதமர் கூறினார்.