Home One Line P1 பெர்சாத்து: “நானா அல்லது மொகிதினா என கட்சித் தேர்தலில் உறுப்பினர்கள் முடிவு செய்யட்டும்!” -மகாதீர்

பெர்சாத்து: “நானா அல்லது மொகிதினா என கட்சித் தேர்தலில் உறுப்பினர்கள் முடிவு செய்யட்டும்!” -மகாதீர்

806
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமக்கும், மொகிதின் யாசினுக்கும் இடையே தேர்வு செய்வதற்கான சிறந்த களமாக பெர்சாத்து தேர்தல் அமையும் என்று டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

பெர்சாத்து இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக மகாதீர் கூறினார். ஆனால் அது எல்லா கட்சிகளிலும் நடக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“விரைவில் பெர்சாத்து தேர்தல் நடக்கும், ஒருவேளை அவர் போட்டியிடுவார், நானும் போட்டியிடுவேன்”

#TamilSchoolmychoice

“யார் வெல்வார்கள் என்று பார்ப்போம் ஆனால் அரசாங்கம் விழாது.”

அடுத்த மாதம் புதிய தேசிய தலைமைக்கு மொத்தம் 189 தொகுதிகள் வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.