Home One Line P1 கொவிட்-19: பெட்டாலிங் மற்றும் லெம்பா பந்தாய் பகுதிகளில் அதிகமான சம்பவங்கள் பதிவு!

கொவிட்-19: பெட்டாலிங் மற்றும் லெம்பா பந்தாய் பகுதிகளில் அதிகமான சம்பவங்கள் பதிவு!

379
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த மூன்று நாட்களில் கொவிட் -19 நோய்த்தொற்றின் புதிய சம்பவங்களில் பெரும்பாலானவை பெட்டாலிங் மற்றும் லெம்பா பந்தாய் பகுதிகளில் அதிகமாகப் பதிவாகி உள்ளது.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, லெம்பா பந்தாய் மற்றும் பெட்டாலிங் தற்போது முறையே 167 மற்றும் 158 சம்பவங்களை பதிவுச் செய்துள்ளன.

லெம்பா பந்தாய், பந்தாய் டாலாம் மற்றும் பாங்சார் பகுதிகளை உள்ளடக்கியது.

#TamilSchoolmychoice

ஷா அலாம், பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயா ஆகிய பகுதிகள் பெட்டாலிங் கீழ் வருகிறது. .

கிழக்கு மலேசியாவில், கடந்த மூன்று நாட்களில் புதிய கொவிட் -19 சம்பவங்கள குறைந்து வருகிறது.