Home One Line P1 கொவிட்-19: நாட்டில் 172 புதிய சம்பவங்கள் பதிவு- 19 பேர் மரணம்!

கொவிட்-19: நாட்டில் 172 புதிய சம்பவங்கள் பதிவு- 19 பேர் மரணம்!

457
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று புதன்கிழமை 172 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மொத்தமாக 1,796 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி இருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த எண்ணிக்கையில் 71 சம்பவங்கள் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்புடையது என்று அவர் தெரிவித்தார்.

இன்று மூன்று இறந்துள்ள நிலையில், இதுவரையிலும், நாட்டில் மொத்தம் 19 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக மரணமுற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், 45 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

இன்று 16 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 199-ஆக உயர்ந்தது.