Home One Line P2 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: ஏப்ரல் 14 வரை கெந்திங் உல்லாசப்போக்கிட நடவடிக்கைகள் நிறுத்தம்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: ஏப்ரல் 14 வரை கெந்திங் உல்லாசப்போக்கிட நடவடிக்கைகள் நிறுத்தம்!

691
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பான அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து கெந்திங் மலேசியா பெர்ஹாட் தனது உல்லாசப்போக்கிட நடவடிக்கைகளை ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளது.

வியாழக்கிழமை புர்சா மலேசியாவுக்கு அளித்த அறிக்கையில், இந்த நிறுத்தமானது, ரிசார்ட்ஸ் வேர்ல்ட் கெந்திங், ரிசார்ட்ஸ் வேர்ல்ட் அவானா, ரிசார்ட்ஸ் வேர்ல்ட் கிஜால் மற்றும் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் லங்காவி ஆகியவற்றை பாதித்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மார்ச் 31-ஆம் தேதி முதல் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார்.

மலேசியாவில் கொவிட் -19 இறப்பு எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை 23 – ஆக உயர்ந்துள்ளது.

ரிசார்ட்ஸ் வேர்ல்ட் பர்மிங்காம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள நில அடிப்படையிலான அனைத்து சூதாட்ட விடுதிகளும் உள்ளிட்ட அதன் இங்கிலாந்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக மூடப்பட்டதாக கெந்திங் மலேசியா கூறியது.