Home One Line P1 கொவிட்-19: பினாங்கில் தன்னார்வ தீயணைப்புக் குழு பொது இடங்களை கிருமிநாசினி தெளித்து உதவி!

கொவிட்-19: பினாங்கில் தன்னார்வ தீயணைப்புக் குழு பொது இடங்களை கிருமிநாசினி தெளித்து உதவி!

436
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் உள்ள தன்னார்வ தீயணைப்புக் குழு பொது இடங்களை கிருமிநாசினி தெளித்து இடத்தை சுத்தப்படுத்துகின்றனர்.

கிருமிநாசினியைத் தெளிக்க தீயணைப்பு இயந்திரங்கள் நேற்றிரவு தொடங்கி செயல்படுகின்றன.

பேருந்து நிறுத்தங்கள், நடைபாதைகள், அடுக்குமாடி வீடுகள், மற்றும் வீட்டு வாயில்கள், கார்களிலும் கூட அவர்கள் கிருமிநாசினியைத் தெளித்தனர்.

#TamilSchoolmychoice

இரவு 8 மணி முதல் அதிகாலை 1 மணி வரை தீயணைப்பு வீரர்கள் 5,200 லிட்டர் கிருமிநாசினியை தெளித்துள்ளனர்.

நன்கொடை செய்யப்பட்ட நிதியைப் பயன்படுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த முயற்சி தொடங்கியது என்று மவுண்ட் எர்ஸ்கைன் தன்னார்வ தீயணைப்பு அணியின் தலைவர் எம்கோ சின் வா கூறினார்.

“நாங்கள் மவுண்ட் எர்ஸ்கைன் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுச் சந்தைகளில் கவனம் செலுத்துகிறோம்.”

“நாங்கள் அதை மக்கள் மீது தெளித்தாலும், அது எந்தத் தீங்கும் ஏற்படாது” என்று அவர் கூறினார்.

” தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும்போது, மக்கள் சிலருக்கு கவலைகள் இருப்பது எங்களுக்குத் தெரியும். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்.”