Home One Line P1 கொவிட்-19 : மலேசியாவில் 142 புதிய பாதிப்புகள்; மரண எண்ணிக்கை 45

கொவிட்-19 : மலேசியாவில் 142 புதிய பாதிப்புகள்; மரண எண்ணிக்கை 45

509
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று புதன்கிழமை (ஏப்ரல் 1) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,908 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 142 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இரண்டு மரணங்கள் புதிதா நேர்ந்திருப்பதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 45 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்தத் தகவல்களை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா (படம்) வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

இன்றைய நிலையில் 102 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்றைய எண்ணிக்கையை விட 8 பேர்கள் கூடுதலாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களில் 66 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய எண்ணிக்கையை விட இதுவும் 8 பேர்கள் கூடுதலாகும்.

நேற்று மட்டும் 108 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்திருக்கிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் இது 22.2 விழுக்காடாகும்.