இந்த கூட்டம் நடத்தப்படுவதற்கான காரணம் என்னவென்றால், நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒற்றுமையை வலியுறுத்துவதும் தேசிய முன்னணி வெற்றியை உறுதி செய்வதும் ஆகும்.
இக்கூட்டத்திற்கு பத்திரிக்கை நிருபர்கள் கலந்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.
“நாங்கள் இங்கு ஒன்று கூடுவதற்கு இதுதான் அதற்கு முக்கிய காரணம்” என்று பத்திரிக்கை ஊடகங்களுக்கு நஜிப் இன்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்னும் சில தினங்களில் தேசிய முன்னணி சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
தேசிய முன்னணிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் பலரை வேட்பாளர்களாக நிறுத்த தான் முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.