Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா? மாலை 4 மணிக்கு பிரதமர் அறிவிக்கிறார்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா? மாலை 4 மணிக்கு பிரதமர் அறிவிக்கிறார்!

512
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா இல்லையா என்று அறிவிக்க உள்ளார்.

அடுத்த செவ்வாய்க்கிழமை முடிவடையும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு குறித்து இந்த சிறப்பு நேரடி ஒளிபரப்பு அமைய உள்ளது.

#TamilSchoolmychoice

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை சுகாதார அமைச்சகம் தீர்மானிக்கும் என்று அரசாங்கம் முன்பு கூறியிருந்தது.

மார்ச் 18-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த இந்த உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று சிலாங்கூர் காவல் துறை நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.