Home One Line P1 கொவிட்-19 : மலேசியா முழுவதும் 5 மட்டுமே சிவப்பு நிற வட்டாரங்கள்

கொவிட்-19 : மலேசியா முழுவதும் 5 மட்டுமே சிவப்பு நிற வட்டாரங்கள்

643
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – மலேசியாவில் கொவிட்-19 மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் கட்டம் கட்டமாக மேம்பட்டு வரும் நிலையில் தற்போதைக்கு 5 வட்டாரங்கள் மட்டுமே சிவப்பு நிறம் கொண்டவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சு 1200-க்கும் மேற்பட்ட உள்ளூர் வட்டாரங்களைக் கண்காணித்ததில் பல இடங்கள் பச்சை நிற வட்டாரங்களாக உருமாறி வருகின்றன. 5 வட்டாரங்கள் மட்டுமே 40-க்கும் மேற்பட்ட தீவிர கொவிட்-19 பாதிப்புகளைக் கொண்ட வட்டாரங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

75 விழுக்காடு வட்டாரங்களில் எந்தவிதத் தொற்றும் இல்லை என்பதால் அவை பச்சை நிற வட்டாரங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

சரவாக்கில் கூச்சிங், கோத்தா சமாரஹான் ஆகிய இரண்டு வட்டாரங்கள், ஜோகூரில் உலு பெனுட், சிலாங்கூரில் உலு லங்காட், நெகிரி செம்பிலானின் லாபு ஆகிய ஐந்து வட்டாரங்கள் மட்டுமே தற்போது சிவப்பு நிற வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

40-க்கும் மேற்பட்ட கொவிட்-19 பாதிப்புகள் கொண்ட வட்டாரங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 20-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் கொண்டவை ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், ஒன்று முதல் 20 வரையிலான பாதிப்புகள் கொண்ட வட்டாரங்கள் மஞ்சள் நிற மண்டலங்களாகவும், அறவே பாதிப்புகள் இல்லாத பகுதிகள் பச்சை நிற மண்டலங்களாவும் வகைப்படுத்தப்படுகின்றன.