Home உலகம் பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆகப் பதிவு

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆகப் பதிவு

511
0
SHARE
Ad

earthquakeமணிலா, ஏப். 11-  பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கே பாடன் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.20 மணிக்கு ஏற்பட்டது. பூமிக்கு அடியில்  4.2 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

மக்கள் அதிகம் வசிக்காத பகுதிகளில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதால் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று அந்நாட்டின் எரிமலை மற்றும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.