கடந்த 24 மணி நேரத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து நாட்டில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,298 ஆக உயர்ந்திருக்கிறது.
122 புதிய பாதிப்புகளில் 52, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் பெறப்பட்ட பாதிப்புகளாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர்கள் கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,413 ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தற்போது நாடு முழுமையிலும் 1,780 பேர்கள் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 27 பேர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 13 பேர்கள் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.