Home One Line P1 இனி மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்- மொகிதின் நினைவூட்டல்

இனி மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்- மொகிதின் நினைவூட்டல்

542
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு தொற்றுநோயிலிருந்து விடுபடுவதை உறுதி செய்வதற்காக நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் தற்போதைய கட்டத்தின் போது, கொவிட் -19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க உதவுவதில் மக்கள் தங்கள் கூட்டு பொறுப்பை அளிக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று செவ்வாய்க்கிழமை நினைவூட்டினார்.

நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் வெற்றியை உறுதிப்படுத்த சுய ஒழுக்கம் முக்கியமானது என்பதால் தற்போதைய கட்டுப்பாட்டு கட்டத்திற்கு அனைத்து மலேசியர்களிடமிருந்தும் அதிக முயற்சிகள் தேவை என்று அவர் கூறினார்.

“இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு பயனுள்ள தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, கொவிட்-19- ஐ எதிர்த்துப் போராட நம் சுய ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டும்.”

#TamilSchoolmychoice

“நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறை அல்லது விதிமுறைகளை பின்பற்ற அனைத்து மலேசியர்களையும் நான் அழைக்கிறேன். கட்டுப்பாட்டு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்படாத நடவடிக்கைகள் மற்றும் துறைகளின் பட்டியலில் உள்ள செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம்.”

“சுய ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்கும், சுற்றுப்புறங்களின் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் தூய்மையைப் பேணுவதற்கும், நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் இது குறித்து கற்பிக்க வேண்டும்” என்று பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு பரிந்துரைத்த தடுப்பு நடவடிக்கைகளை நமது வாழ்க்கையில் ஒரு புதிய இயல்பாக பின்பற்ற வேண்டும், அதாவது கூடல் இடைவெளி, சுய சுகாதாரம் பேணுதல் மற்றும் பொதுவிடத்தில் முகக்கவசம் அணிவது போன்றவற்ரை பேண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“உங்களை நீங்களே ஒழுங்குபடுத்துங்கள். சுகாதார அமைச்சகம் மற்றும் அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றவும். நாம் ஒன்றாக பாதுகாப்பாக இருப்போம் ”என்று அவர் கூறினார்.