Home One Line P1 கெடா: 2 பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறினர்- தேசிய கூட்டணிக்கு ஆதரவு

கெடா: 2 பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறினர்- தேசிய கூட்டணிக்கு ஆதரவு

474
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: தேசிய கூட்டணிக்கான ஆதரவை சுட்டிக்காட்டி பிகேஆரைச் சேர்ந்த இரண்டு கெடா சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கட்சியை விட்டு வெளியேறி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இரு சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த நடவடிக்கையால், மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் துன் மகாதீர் தலைமையில் பெர்சாத்து  கட்சி மற்றும் நம்பிக்கைக் கூட்டணி தலைமையிலான கெடா அரசு மாநில சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.

பெர்சாத்து மற்றும் நம்பிக்கைக் கூட்டணி இப்போது மாநில சட்டமன்றத்தில் 17 இடங்களை மட்டுமே வகித்து வருகின்றனர் .

#TamilSchoolmychoice

17 இடங்களையும் (பாஸ் -15 மற்றும் அம்னோ -2) வைத்திருக்கும் தேசிய கூட்டணி இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு புதிய மாநில அரசை 19 இடங்களுடன் அமைக்க உள்ளன.