Home One Line P2 கட்டுப்பாடுகளை தளர்வு செய்த நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- உலக சுகாதார நிறுவனம்

கட்டுப்பாடுகளை தளர்வு செய்த நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- உலக சுகாதார நிறுவனம்

612
0
SHARE
Ad

ஜெனீவா: கொவிட்-19 கட்டுப்பாட்டை தளர்வு செய்வதில் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலக நாடுகள் அதிக விழிப்புடன் இருக்குமாறு அது வலியுறுத்துகிறது.

சில ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை எளிதாக்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும், அந்நாடுகளில் அதிகரிக்கும் தொற்றுநோய்கள் குறித்து கவலைகள் உள்ளன.

#TamilSchoolmychoice

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர சுகாதார நிபுணர் மைக் ரியான் கருத்துப்படி, இதில் ஜெர்மனி, சீனாவின் வுஹான் நகரம் மற்றும் தென் கொரியா ஆகியவை அடங்கும் என்று கூறினார். சமீபத்தில் ஒரு கேளிக்கை விடுதியில் பாதிக்கப்பட்ட ஒருவர் 85 பேருக்கு தொற்றைப் பரப்பி விட்டதை அவர் குறிப்பிட்டார்.

“கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, மக்கள் ஒருவருக்கொருவர் பழகுவர், இது மறுக்க முடியாதது.”

“அவர்கள் கூடல் இடைவெளியை பராமரிப்பார்கள், ஆனால் தொற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்கும்.”

“முந்தைய எந்தவொரு நோய்த்தொற்றையும் குறிப்பிடாமல், புதிய சம்பவ குழுவினரை விசாரிக்க உதவும் ஒரு வலுவான சுகாதார அமைப்பை நாங்கள் கொண்டிருக்கிறோமா என்பது கேள்வி. இது தவிர்க்கப்பட வேண்டும்.”

கொவிட்-19 சம்பவங்களைக் கண்டறியும் வாய்ப்பு கிடைத்தபோது, ​​சில நாடுகளின் பரிசோதனை திறனை அதிகரிக்காததற்கு பொறுப்பற்றவர்கள் என்று ரியான் விமர்சித்தார்.

இந்த உலகளாவிய தொற்றுநோய் ஏற்கனவே 4 மில்லியனுக்கும் அதிகமான மக்களைத் தொற்றியுள்ளதுடன் 283,000 உயிர்களை பறித்துள்ளது.