Home உலகம் எத்தியோப்பியாவில் பஞ்சம்- மேலும் மோசமாகும் நிலை

எத்தியோப்பியாவில் பஞ்சம்- மேலும் மோசமாகும் நிலை

470
0
SHARE
Ad

ஜெனீவா: வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்ச நிலைமை தீவிரமடைந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார்.

“இப்போது பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் மோசமாகிவிடும்,” என்று அவர் மேலும் கூறினார்:

பகுப்பாய்வில், போரினால் பாதிக்கப்பட்ட டைக்ரே வட்டாரத்திலும், அண்டை நகரமான அம்ஹாரா மற்றும் அபாரிலும் 350,000 மக்கள் கடுமையான நெருக்கடியில் வாழ்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

1.7 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையால் டைக்ரே பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.

பகுப்பாய்வின் படி, இப்பகுதியில் உணவு நிலைமை பேரழிவின் நிலையை எட்டியுள்ளது. இது பெரிய பகுதிகளில் பரவியுள்ள சிறிய குழுக்களை பாதிக்கும். பட்டினி மற்றும் இறப்புகள் அதிகமாக நிகழக்கூடும்.

ஐ.நா.வின் உலக உணவு திட்டம், உணவு, வேளாண்மை அமைப்பு மற்றும் குழந்தைகள் நிறுவனமான யுனிசெப் ஆகியவை நெருக்கடிக்கு தீர்வு காண அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.