Home One Line P1 கொவிட்19: நாட்டில் முதல் முறையாக மிகக் குறைவாக 16 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: நாட்டில் முதல் முறையாக மிகக் குறைவாக 16 சம்பவங்கள் பதிவு

490
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: இன்று செவ்வாய்க்கிழமை (மே 12) நண்பகல் வரை மலேசியாவில் 16 புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,742-ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 110 பேர் கொவிட் பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,223-ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதார அமைச்சின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுமையிலும் 1,410 பேர் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 16 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 3 பேர் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.