Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கலந்து கொள்ளவில்லை

நம்பிக்கைக் கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கலந்து கொள்ளவில்லை

405
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கூட்டணி பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

நம்பிக்கைக் கூட்டணி தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அவரது மகன் முக்ரிஸ் மகாதீர் பக்கத்தில் அமர்ந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

அன்வார் உட்பட அச்சந்திப்பில் கூட்டத்தில் எந்தவொரு பிகேஆர் பிரதிநிதியும் கலந்து கொள்ளவில்லை என்று மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் அச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வாரிசான் கட்சியைப் பிரதிநிதித்து அதன் தலைவர் ஷாபி அப்டால் கலந்து கொண்டார்.

இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வு குறித்து கருத்து தெரிவிப்பதற்காக இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.