இந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் மலேசிய நாடாளுமன்ற மேலவையின் தலைவரும், மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவருமாகிய டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ஆவார்.
சிறந்த நிர்வாகத் திறனாலும், மேலவையைத் தனது பதவிக் காலத்தின்போது கட்டுக்கோப்பாக வழி நடத்திய பாங்கினாலும், தனி மரியாதையைப் பெற்று மலேசிய நாட்டுக்கு உயரிய கௌரவத்தை பெற்றுத் தந்துள்ளார் என்பது வெள்ளிடை மலையாகும்.
எஸ்.பி.மணிவாசகம் (படம்) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்தகைய நியமனம் இந்திய சமுதாயத்திற்கு கிடைத்திடும் மிகப் பெரிய அங்கீகாரமாக அமையும் என்றும் மணிவாசகம் வர்ணித்தார்.
விக்னேஸ்வரனுக்கு ஓர் உயரிய நியமனத்தை இந்திய சமுதாயம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றது என்பதனை பிரதமர் கவனத்தில் கொண்டு சிறந்த முடிவை எடுப்பார் என எஸ்.பி.மணிவாசகம் நம்பிக்கை தெரிவித்தார்.