Home One Line P1 செமினி குடிநுழைவு தடுப்பு முகாமில் மட்டும் 21 புதிய கொவிட்-19 பாதிப்புகள்

செமினி குடிநுழைவு தடுப்பு முகாமில் மட்டும் 21 புதிய கொவிட்-19 பாதிப்புகள்

586
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48 புதிய கொவிட்-19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் இன்று சனிக்கிழமை தனது அன்றாட பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட் 19 பாதிப்புகள் எண்ணிக்கை 7,185 ஆக உயர்ந்தது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 48 பாதிப்புகளில் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாவர். 44 பேர் உள்நாட்டில் தொற்று கண்டவர்கள். இவர்களில் 25 பேர் வெளிநாட்டினர். அந்த 25 பேர்களில் 21 பேர் செமினி குடிநுழைவு தடுப்பு முகாமில் இருப்பவர்களாவர்.

#TamilSchoolmychoice

ஒருநாளில் 53 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதைத் தொடர்ந்து 5,912 பேர் இதுவரையில் குணமடைந்திருக்கின்றனர்.

தொற்று பீடிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் விழுக்காடு 82.3 % ஆக இருப்பதாகவும் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

தற்போது நாடெங்கிலும் 1,158 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிரக் கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஒருநாளில் மரணம் ஏதும் நிகழவில்லை. இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 115 ஆக இருந்து வருகிறது.