Home One Line P2 பன்னீர் செல்வத்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக முதல்வர்

பன்னீர் செல்வத்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக முதல்வர்

756
0
SHARE
Ad

சென்னை – இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலப் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று திங்கட்கிழமை (மே25) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

தெலுங்கானா ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்திரராஜனும் தொலைபேசி வழி பன்னீர் செல்வத்துடன் உரையாடி நலம் விசாரித்தார் என ஊடகங்கள் தெரிவித்தன.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் சென்னையிலுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்ட பன்னீர் செல்வம் மீதான பரிசோதனைகள் முடிந்ததும் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார் என மருத்துவமனையின் தகவல் அறிக்கை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

மற்ற சில அமைச்சர்களும், அதிமுக பிரமுகர்களும் பன்னீர் செல்வத்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.