Home One Line P1 ‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்

‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்

668
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கட்சிக்கு துரோகம் இழைத்த தரப்புடன் சேர்ந்தால் நாட்டின் முதல் இரண்டு பதவிகளில் ஒன்று அவருக்கு வழங்கப்படும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இதற்கிடையில், போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தாம் சிலாங்கூர் மந்திரி பெசராக இருக்க விரும்புகிறார் என்ற ஊகத்தையும் நிராகரித்தார்.

இன்று முகநூலில் நேரடி ஒளிபரப்பில் பேசிய அவர், தாம் அவர்களுடன் சேர விரும்பினால் அவருக்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

“தற்போதைய சூழ்நிலையில் நான் விரும்பினால், அவர்களுடன் இணைய தேர்வு செய்யலாம்.

“ஒரு சிறந்த பதவிக்கு நான் உத்தரவாதம் அளிக்க முடியும். இல்லையெனில், பிரதமர், துணை பிரதமருக்கு உத்தரவாதம் இருக்கும்” என்று அவர் கூறினார்.

இருப்பினும், கொள்கைகளின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்று அன்வார் தெளிவுபடுத்தினார்.

தனக்கு யார் உத்தரவாதம் அளித்தார்கள் என்பதை அவர் விளக்கவில்லை. ஆனால், கட்சியை விட்டு வெளியேறியவர்கள் அல்லது அதன் கொள்கைகளை இனி நம்பாதவர்களுக்கு எதிராக பிகேஆரின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது இந்த அறிக்கையை அவர் வெளியிட்டார்.