Home One Line P1 பொதுத் தேர்வு வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் பள்ளி அமர்வு தொடங்கும்

பொதுத் தேர்வு வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் பள்ளி அமர்வு தொடங்கும்

397
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொதுத்  தேர்வு வகுப்பு மாணவர்களுக்கு (படிவம் ஐந்து மற்றும் படிவம் ஆறு) ஜூன் 24- ஆம் தேதி முதல் பள்ளி அமர்வு தொடங்கும் என்று கல்வி அமைச்சர் முகமட் ராட்ஸி முகமட் ஜிடின் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றின் ஆலோசனையைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

“பொதுத் தேர்வு மாணவர்களான, எஸ்பிஎம், எஸ்விஎம், எஸ்டிபிஎம், எஸ்டிஏஎம் மற்றும் அனைத்துலக தேர்வு ஆகியவற்றுக்கான தொடக்க நாள் ஜூன் 24 புதன்கிழமை என்று கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ” என்று அவர் இன்று சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, இன்று தொடங்கும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது, பள்ளிகள் மீண்டும் கட்டம் கட்டமாக திறக்கப்படும் என்று பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்திருந்தார்.