கொவிட்-19 பாதிப்பால் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,453-ஆக உயர்ந்தது.
இன்று ஒருவர் மரணமுற்றதைத் தொடர்ந்து நாட்டின் மரண எண்ணிக்கை 121-ஆக உயர்ந்தது.
இன்று 35 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,346 ஆக உயர்ந்தது.
986 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். யாருமே சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெறவில்லை.