Home One Line P2 குஜராத்தில் தொடர்ச்சியான நிலநடுக்கம்!

குஜராத்தில் தொடர்ச்சியான நிலநடுக்கம்!

688
0
SHARE
Ad

குஜராத்: திங்கள்கிழமை பிற்பகல் குஜராத்தில் குச்சில் என்ற பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12:57 மணியளவில் குச்சில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் குச்சை தாக்கிய இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.

இதுவரை எந்த உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்படவில்லை.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி சம்பவ இடத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை இரவு பூகம்பம் ஏற்பட்ட பச்சாவ் அருகே மையப்பகுதிக்கு அருகில் இருப்பதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை இரவு குஜராத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.

குச் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் சில வீடுகள் முதல் கட்ட தகவல்களின்படி விரிசல்களை உருவாக்கியது.

இந்த அதிர்வலையின் மையப்பகுதி குச் மாவட்டத்தில் பச்சாவ் அருகே அமைந்துள்ளது. இரவு 8:13 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.