Home One Line P1 ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவிலிருந்து வெளியேறினார்

ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவிலிருந்து வெளியேறினார்

453
0
SHARE
Ad

சிரம்பான்: ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசபின் ஜசெகவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

தாம் இப்போது சுயேச்சை வேட்பாளர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜசெக உறுப்பினராக பதவி விலகியதாக அறிவிக்கப்பட்ட கடிதம் கிடைத்ததை மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ சுல்கிப்லி முகமட் உமர் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

“சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருக்க விரும்பும்  அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அவர் இன்னும் மந்திரி பெசார், டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் மற்றும் நெகிரி செம்பிலான் நம்பிக்கைக் கூட்டணி தலைமைக்கு முழு ஆதரவையும் தருவார் என்று கூறினார்.

“அவர் ஜசெக கட்சியில் மட்டும் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகி உள்ளார், எனவே தேர்தல் இல்லை.” என்று அவர் கூறினார்.