Home One Line P1 அடிப்: நீதிமன்ற விசாரணைக்கு எதிராக காவல் துறை செயல்படவில்லை

அடிப்: நீதிமன்ற விசாரணைக்கு எதிராக காவல் துறை செயல்படவில்லை

469
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணம் தொடர்பாக நீதிமன்றத்தின் விசாரணையை மதிக்காமல், முரணாக அறிக்கைகளை வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டை காவல் துறை மறுத்துள்ளது.

உண்மைகள் எதுவும் மறைத்து பெய்யான கூற்றுகளை தாம் வெளியிடவில்லை என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

“வழங்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் விசாரணைகள் மற்றும் சமீபத்திய கண்டுபிடிப்புகளிலிருந்து வந்தவை. அவை விசாரணையின் முடிவுகளுக்கு முரணாக இல்லை.

#TamilSchoolmychoice

“இன்றைய நிலவரப்படி, முகமட் அடிப் வழக்கு மூடப்படவில்லை. இது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302- இன் கீழ் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது,” என்று அவர் கூறினார்.

முகமட் அடிப்பின் குடும்பத்தினர் அவரது வழக்கறிஞர்கள் வழியாக காவல் துறை நீதிமன்றத்தின் விசாரணையை மதிக்கவில்லை என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணாக செயல்படுகிறார்கள் என்றும் கூறியதையடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இன்றுவரை, முகமட் அடிப் தாக்கப்பட்டதைக் கண்டதாக சாட்சிகள் இல்லை என்றும், பெறப்பட்ட அனைத்து அறிக்கைகளும் செவிப்புலன் அல்லது தனிப்பட்ட கருத்துகள் என்று அவர் வலியுறுத்தினார்.

“குற்றவாளிகளை அடையாளம் காண இன்னும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விசாரணையின் முடிவைத் தொடர்ந்து பல பிரச்சனைகள் குறித்து மேலும் ஆராயப்பட வேண்டும்.

“சாட்சி கருத்துகள் மற்றும் நிபுணர்களின் அடிப்படையில் ஒரு தாக்குதல் நடந்திருந்தால், தாக்குதலின் அடையாளங்கள் இருக்கும், மேலும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய விசாரணைக் குழு இந்த விஷயத்தை ஆய்வு செய்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக, முரண்பாடாக இருப்பதாகக் கண்டறியப்பட்ட மேலதிக சாட்சிகளையும் விசாரணைக் குழு விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

“இதேபோல் விசாரணையின் போது தங்கள் அறிக்கைகளை வழங்கும்போது புதிய தகவல்கள் அல்லது விளக்கங்களை வெளிப்படுத்திய சாட்சிகள் முதலில் விசாரிக்கப்பட வேண்டும்.

“விசாரணையில் புதிய ஆதாரங்கள் அல்லது விளக்கங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் கூறினார்.