Home One Line P1 மொகிதினுக்குப் பக்கபலமாக இருப்பேன்!- அகமட் பைசால்

மொகிதினுக்குப் பக்கபலமாக இருப்பேன்!- அகமட் பைசால்

468
0
SHARE
Ad

ஈப்போ: பெர்சாத்து தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு இரு முக்கியத் தலைவர்கள் அமர இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

தலைவர் பதவியில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினும், துணைத் தலைவர் பதவிக்கு அகமட் பைசால் அசுமுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்டு மாதம் அனைத்து தொகுதிக் கூட்டங்களும் முடிவடைந்தப் பிறகு இது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

நேற்று, இவ்விரு பதவிகளுக்கும் எந்தவொரு போட்டியும் இல்லை என்று கட்சித் தேர்தல் குழு அறிவித்ததை அடுத்து இது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மொகிதின் யாசினுக்கு, தாம் தொடர்ந்து பலமாக இருக்க உள்ளதாக அகமட் பைசால் கூறினார்.

“நான் இந்த பதவிக்குப் போட்டியிடப் போகிறேன் என்ற போது, தலைவருக்கு பக்கபலமாக இருப்பேன் என்ற எண்ணத்தில் செய்தேன்.

“இது என் கடமை. முக்கியமானது என்னவென்றால், கட்சி எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும், தேர்தல் உட்பட. ” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இதற்கிடையில், நேற்று வியாழக்கிழமை பெர்சாத்து அவைத் தலைவர் பதவிக்கு எவரும் போட்டியிடவில்லை என்று கட்சியின் தேர்தல் குழுத் தெரிவித்திருந்தது.

சைட் ஹமிட் அல்பார்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இப்பதவியை வகித்து வந்தார்.

இதற்கிடையில், பெர்சாத்து தலைவர் பதவிக்கான ஒரே வேட்பாளர் மொகிதின் யாசின் என்றும் அது அறிவித்திருந்தது.

துணைத் தலைவர் பதவிக்கு, பேராக் மந்திரி பெசார், அகமட் பைசால் அசுமு மட்டுமே போட்டியிடுகிறார்.

நேற்று,  உச்சமன்றக் குழு, இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக கட்சி தலைமையகத்தில் எண் குலுக்கல் நடத்தப்பட்டது.

வேட்பாளர்களின் எண் பட்டியலை உறுப்பினர்கள் பெர்சாத்துவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் http://pribumibersatu.org.my/sys/index.php/calon_mpt அணுகலாம்.

“அனைத்து தொகுதிகளுக்கும் விநியோகிக்கப்படும் பட்டியலில் வேட்பாளர்களின் பட்டங்கள் உட்பட தங்கள் பெயர்களை அச்சிடுவதற்கான விவரத்தை தேர்தல் குழு கவனத்தில் எடுத்துக் கொண்டது.

“வாக்குச் சீட்டில் தங்கள் பெயர்களின் அதிகாரப்பூர்வ அச்சில் மாற்றங்களைச் செய்ய விரும்பும் வேட்பாளர்கள், ஜூலை 25- க்கு முன்னர் jpp.bersatu@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக எழுத்து மூலம் தெரிவிக்கலாம்” என்று சைட் அல்பார் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

பெர்சாத்து உதவித் தலைவர் பதவிக்கு 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் ரொனால்ட் கியாண்டி, முகமட் ரெட்சுவான் யூசோப், அப்துல் ராஷிட் அப்துல் ரஹ்மான், மஸ்லான் புஜாங் மற்றும் முகமட் ராட்ஸி முகமட் ஜிடின் ஆகியோரும் அடங்குவர்.

பெர்சாத்து இளைஞர் தலைமைப் பொறுப்புக்கு, இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வான் அகமட் பைசால் வான் அகமட் கமால், முகமட் முசாம்மில் இஸ்மாயில் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையில், பெர்சாத்து மகளிர் தலைமைப் பதவிக்கு நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர் அமைச்சராக இருக்கும் ரினா ஹருணும் அடங்குவார்.