Home One Line P1 தலைவர்களின் சுவரோவியங்கள் சீர்குலைப்பு, காவல் துறை விசாரணை!

தலைவர்களின் சுவரோவியங்கள் சீர்குலைப்பு, காவல் துறை விசாரணை!

428
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் தலைவர்கள் சுவரோவியம் சீர்குலைக்கப்பட்டு தகாத வார்த்தைகளால் எழுதப்பட்ட விவகாரம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஷா அலாமில் உள்ள ஒரு கடை வரிசையின் கட்டிடத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் பலரது கவனத்தை ஈர்த்தன.

இந்த செயல் அவமானத்திற்கு உரியது என்று இவ்வோவியங்களை வரைந்த ஓவியர் முகமட் பிர்டாவுஸ்  குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

தாங்கள் வரைந்த ஓவியங்களை அவமானப்படுத்தி இம்மாதிரியான செயலில் ஈடுபட்டதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

அந்த ஓவியங்கள் மீது சிவப்பு நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது.

இந்த மோசச் செயல் அதிகாலையில் செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும், அரசியல் காரணங்களினால் இந்த சீர்குலைப்பு நடந்திருக்கலாம் என்ற கருத்தையும் முகமட் பிர்டாவுஸ் தெரிவித்தார்.

இதன் காரணமாக, ஷா அலாம் நகராட்சி மன்றம் சேதமடைந்த ஓவியங்கள் மீது வெள்ளை வண்ணம் பூச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதனால், அங்குள்ள அனைத்து ஓவியங்களும் அழிக்கப்பட்டன.

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின், பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, பாஸ் கட்சித் தலைவர் டத்தோ அப்துல் ஹாடி அவாங் ஆகியோரின் ஓவியங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி மாமன்னர் தமது குடும்பத்தினருடன் அந்த பகுதிக்கு வருகைப் புரிந்திருந்தார். அதனை அடுத்து, சுகாதார அமைச்சு இயக்குனரும் அங்கு வருகைப் புரிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

இதனிடையே, இந்த மோசச் செயல் குறித்து உறுதிப்படுத்திய ஷா அலாம் மாவட்ட காவல் துறைத் தலைவர் பாஹாருடின் மாட் தாயிப் சம்பந்தப்படவர்களைக் கண்டறிய விசாரணை நடந்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.