Home One Line P1 கொவிட்19: 21 புதிய சம்பவங்கள் பதிவு

கொவிட்19: 21 புதிய சம்பவங்கள் பதிவு

353
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,800-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 21 சம்பவங்களில் ஆறு பேர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள் ஆவர். உள்நாட்டில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மலேசியர்கள்.

#TamilSchoolmychoice

சமீபக் காலமாக கொவிட்19 தொற்று சம்பவங்கள் அதிகரித்த வண்ணமாக உள்ளன. இதனிடையே, நாட்டில் மேலும் ஒரு நடமாட்டக் கட்டுப்பாட்டை அமல்படுத்த நாடும், மக்களும் விரும்பமாட்டார்கள் என்று நம்புவதாக பிரதமர் இன்று நேரடி ஒளிபரப்பில் தெரிவித்திருந்தார்.

இன்று இருவர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8, 555-ஆக உயர்ந்தது.

நாட்டில் மொத்தம் 123 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நாட்டில் இரட்டை இலக்கு எண் பதிவாகி வருகிறது. மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து 13 புதிய தொற்றுக் குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.