Home One Line P2 தமிழகத்தில் ஒரே நாளில் 6,000 தொற்று சம்பவங்கள் பதிவு

தமிழகத்தில் ஒரே நாளில் 6,000 தொற்று சம்பவங்கள் பதிவு

467
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவில் தினசரி கொவிட்19 தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நேற்று வியாழக்கிழமை 6,472 பேருக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,336 பேர். ஒட்டுமொத்த அளவில் 192,964 பேருக்கு தமிழகத்தில் கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 5,210 பேர் கொவிட்19 தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 136,793 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வெளியாகியுள்ளனர்.

#TamilSchoolmychoice

52,939 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 88 பேர் உயிரிழந்தனர்.