Home One Line P1 ஜோ லோ மக்காவில் இருப்பதாக காவல் துறைத் தகவல்!

ஜோ லோ மக்காவில் இருப்பதாக காவல் துறைத் தகவல்!

657
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய காவல் துறையால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மக்காவில் இருப்பதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

“அவர் அங்கு இருந்தபோது ஒரு பரிவர்த்தனை செய்ததாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரைக் கண்டுபிடித்து நீதிக்கு முன் கொண்டு வர அதிகாரிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர்” என்று அவர் இன்று தெரிவித்துள்ளார்.

1எம்டிபி ஊழலை விசாரிக்க உதவ வேண்டிய அவசியம் இருந்ததால், ஜோ லோ மீதான வேட்டையை தாமதப்படுத்த காவல்துறை விரும்பவில்லை என்று அப்துல் ஹாமிட் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஜோ லோவை மீண்டும் கொண்டுவருவதை நான் ஒருபோதும் கைவிடவில்லை. அவர் நாட்டின் பணத்தை கொள்ளையடித்துள்ளார். அவர் சிறையில் வைக்கப்படுவார்.

“அவரும், பிற குற்றவாளிகள் காரணமாக, நாடு இப்போது கடனில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, ஜோ லோவின் குடும்பம் இப்போது ஹாங்காங்கில் இருப்பதாகத் தெரிவதாக ஹாமிட் கூறினார். சம்பந்தப்பட்ட நபர் திருடிய பணத்தை மீட்கவும் காவல் துறையினர் முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, 1எம்டிபி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஜோ லோவை வேட்டையாடுவதில் மலேசியா வெளிநாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவில் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய அத்தொழிலதிபரை கைது செய்ய அரசாங்கம் அரசியல் உறுதியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஹாங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷாம்சுல் இஸ்காண்டார் முகமட் அகின் கூறினார்.

“ஜோ லோ ஆஸ்திரேலியா, மக்காவ் என விடுமுறைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம். நாட்டின் முதல் துரோகி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். மலேசியாவில் அவரை நீதிக்கு கொண்டு வர தாமதிக்க வேண்டாம்” என்று அவர் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

ஜோ லோ மட்டுமல்ல, முன்னாள் எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரி நிக் பைசால் அரிப் காமில் உட்பட பல நபர்களும் மலேசியாவுக்கு அழைத்து வரப்பட வேண்டும் என்று அவர் கூறியபோது டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் அதனை ஏற்றுக் கொண்டார்.