Home One Line P2 பெய்ரூட்டில் பெரிய வெடிப்பு, 78 பேர் மரணம்

பெய்ரூட்டில் பெரிய வெடிப்பு, 78 பேர் மரணம்

675
0
SHARE
Ad

பெய்ரூட்: செவ்வாயன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டனர். 4,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததை அடுத்து லெபனான் துக்கத்தில் உள்ளது.

முதலில் தீ ஏற்பட்டு, திடீரென வெடித்து, போர்களம் போன்ற உருவத்தை ஏற்படுத்தியது. இதனால், நகரம் முழுவதும் அதிர்ந்தது.

அதிபர் மைக்கேல் அவுன், 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பற்ற முறையில் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

புதன்கிழமை அவசர அமைச்சரவைக் கூட்டத்தை அவர் திட்டமிட்டு, இரண்டு வார அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு அதிகாரப்பூர்வ துக்க காலத்தை நாடு கடைபிடிக்கும்.

“நாம் ஒரு பெரிய பேரழிவை பார்த்துள்ளோம்” என்று லெபனானின் செஞ்சிலுவை சங்கத் தலைவர் ஜார்ஜ் கெட்டானி உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“எல்லா இடங்களிலும் பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழப்புகளுமாக உள்ளது”

வெடிப்பிற்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

2013- ஆம் ஆண்டில் துறைமுகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் இறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்குள்ள ஒரு கிடங்கில் அது சேமிக்கப்பட்டுள்ளது.