Home One Line P2 பிரணாப் முகர்ஜி: அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுவாசக் கருவி பொருத்தப்பட்டது

பிரணாப் முகர்ஜி: அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுவாசக் கருவி பொருத்தப்பட்டது

729
0
SHARE
Ad

புது டில்லி: முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஓர் உறைவு அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் திங்கட்கிழமை சுவாசக் கருவி உதவியில் வைக்கப்பட்டார். அவருக்கு நேற்று கொவிட் 19 தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இராணுவ மருத்துவமனையின் வட்டாரங்களின்படி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில மணிநேரங்கள் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் அவர் கொவிட் தொற்றுக்கு ஆளாகாமல் இருந்திருந்தால், சுவாசக் கருவி உதவி தேவைப்பட்டிருக்காது என்று தெரிவித்திருந்தது.

84 வயதான முகர்ஜி திங்களன்று தமக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும், கொவிட்19 பரிசோதனை மேற்கொள்ளவும் வலியுறுத்தினார்.

வேறு சில காரணங்களுக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த போது, அங்கு கொவிட்19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதாகத் தெரிவித்தார்.