Home One Line P1 தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய பெண்ணுக்கு சிறைத் தண்டனை, அபராதம்

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய பெண்ணுக்கு சிறைத் தண்டனை, அபராதம்

442
0
SHARE
Ad

ஈப்போ: வீட்டில் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி வெளியே சென்றதன் காரணமாக, வயதான பெண் ஒருவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனையும், 8,000 ரிங்கிட் அபராதத்தையும் ஈப்போ கீழ்நிலை நீதிமன்றம் விதித்தது.

அண்மையில், கொவிட்19 நோய்க்கான கண்காணிப்பில் இருந்த அவர் கடை ஒன்றில் சாப்பிடும் புகைப்படம் பரவலாக சமூகப்பக்கங்களில் பதிவிடப்பட்டதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்புகைப்படத்தில், அப்பெண் தனது மணிக்கட்டில் இளஞ்சிவப்பு குறிச்சொல் அணிந்திருந்தது தெளிவாக இருந்தது. அவர் கடையில் அமர்ந்து உணவு உண்பது போன்ற புகைப்படம் பரலாகி மக்களின் விமர்சனத்தைப் பெற்றது.

#TamilSchoolmychoice

மேரு ஹைட்ஸ் பகுதியைச் சேர்ந்த அப்பெண், தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பண்டார் மேரு ராயாவில் தனது உணவை உட்கொண்டதாக அச்செய்தி தெரிவித்திருந்தது.