Home One Line P1 பெர்சாத்து, முவாபாக்காட் நேஷனலுடன் இணைந்தது

பெர்சாத்து, முவாபாக்காட் நேஷனலுடன் இணைந்தது

855
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ பாஸ் கட்சிக்கு இடையிலான ஒப்பந்தமான முவாபாக்காட் நேஷனலில் சேர பெர்சாத்து இணைய ஒப்புக் கொண்டுள்ளது என்று அதன் தலைவர் மொகிதின் யாசின் இன்று சனிக்கிழமை அறிவித்தார்.

உறுப்பினர்களுக்கு காணொளி செய்தியில் இது குறித்து தெரிவித்த மொகிதின், இன்று கட்சித் தேர்தலுக்கு முன்னதாக பெர்சாத்துவிற்கு துரோகம் இழைத்ததாகக் கூறப்படும் கருத்தினை நிராகரித்தார்.

“நான் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை. நான் இந்த கட்சியை நிறுவினேன், நான் நிறுவிய கட்சிக்கு துரோகம் இழைக்க எந்த காரணமும் இல்லை, ”என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னாள் பெர்சாத்து தலைவரான டாக்டர் மகாதீர் முகமட் பற்றியும் அவர் பேசினார்.

“அவரது பங்களிப்புகளை என்னால் மறுக்க முடியாது. எங்கள் முன்னாள் தலைவராக நான் அவரை மதிக்கிறேன். எனக்கு நெருக்கமானவர்களுக்கு நான் அவரை எவ்வளவு மதிக்கிறேன் என்று தெரியும்.

“அவர் இனி எங்களுடன் இல்லை என்று நாங்கள் வருத்தப்படுகிறோம், பரவாயில்லை. அவர் தனது பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார், நான் அவருக்கு சிறந்தது ஏற்பட விரும்புகிறேன்.

“நாம் முன்னேற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

முவாபாக்காட் நேஷனலில் சேர பெர்சாத்து எடுத்த முடிவினால், அரசியல் கட்சிகளின் பெரிய பங்களிப்பைக் காண இயலும் என்று கூறினார். இது அனைத்து மலேசியர்களுக்கும் நல்லதைச் செய்ய முடியும் என்று மொகிதின் கூறினார்.

“பெர்சாத்துவுக்கு இது சிறந்த தேர்வு என்று நான் நம்புகிறேன்.

“நாங்கள் அம்னோ, பாஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகளுடன் பெரிய கூட்டணியில் இருக்கத் தேர்ந்தெடுத்துள்ளோம். இது எங்களுடன் பெரும்பான்மையான மக்கள் இருப்பதைக் காண்பிக்கும்,” என்று அவர் கூறினார்.

மாநில அளவில், மொகிதின் பெர்சாத்து உறுப்பினர்களை தேசிய கூட்டணி உறுப்பியக் கட்சிகளின் உறுப்பினர்களுடன் பணிபுரியும் உறவுகளை வலுப்படுத்த ஊக்குவித்தார்.

நான்கு ஆண்டுகளில், பெர்சாத்து 197 தொகுதிகளையும் 2,000- க்கும் மேற்பட்ட கிளைகளையும் அமைத்துள்ளது.