நேற்று 14 சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் இன்று புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டும் கணிசமாகக் குறைந்திருக்கிறது.
அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பான மரணம் ஏதும் நிகழவில்லை.
இதுவரையில் கொவிட்-19 தொடர்பான மரண எண்ணிக்கை 128 ஆக இருந்து வருகிறது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 6 சம்பவங்களில் 2 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். எஞ்சிய 4 பேர் வெளிநாட்டிலிருந்து தொற்று கண்டவர்களாவர்.
இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,360 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,079 ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நாட்டில் மொத்தம் 153 பேர் இன்னும் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 3 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
உள்நாட்டில் தொற்று கண்ட இருவரில் ஒருவர் சிலாங்கூரையும் இன்னொருவர் பகாங்கையும் சேர்ந்தவர்.