Home One Line P1 கொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே! ஒரே ஒரு மரணம்!

கொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே! ஒரே ஒரு மரணம்!

582
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 20 புதிய கொவிட்19 சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன.

இதில் 17, உள்ளூர் நோய்த் தொற்றுகள் ஆகும். இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் 3 ஆகும்.

புதிய சம்பவங்களைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 10,167 சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

51 பேர் இன்று சிகிச்சை குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

இதுவரையில் மொத்தமாக 9,315 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 722 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.

உள்நாட்டில் பீடிக்கப்பட்ட 20 சம்பவங்களில் 17 சம்பவங்கள்  உள்ளூரில் தொற்று கண்டவையாகும். எஞ்சிய 3 சம்பவங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானவை.

உள்ளூர் தொற்றுகளான 17 சம்பவங்களில் 14 பேர் மலேசியர்களாவர். அவர்களில் 9 பேர் கெடாவைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 5 பேர் சபா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

உள்ளூரில் தொற்று கண்ட 3 வெளிநாட்டு சம்பவங்களில் அனைவருமே சபாவைச் சேர்ந்தவர்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட 3 சம்பவங்களில் இருவர் மலேசியர்கள். ஒருவர் வெளிநாட்டவர். மலேசியர்கள் இருவரில் ஒருவர் கோலாலம்பூரையும் மற்றொருவர் சிலாங்கூரையும் சேர்ந்தவர்.

இறக்குமதி சம்பவங்களில் சம்பந்தப்பட்ட ஒரே வெளிநாட்டு நபர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர்.

இன்று ஒருவர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 130-ஆக உயர்ந்துள்ளது.