Home One Line P2 ஆஸ்ட்ரோ : “விழுதுகள் சமூகத்தின் குரல்” – நடுநிலையாளர்கள்; அறிவிப்பாளர்கள்!

ஆஸ்ட்ரோ : “விழுதுகள் சமூகத்தின் குரல்” – நடுநிலையாளர்கள்; அறிவிப்பாளர்கள்!

1516
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 5) முதல் ஒளிபரப்பு காணவிருக்கிறது புதிய தோற்றத்திலான “விழுதுகள்: சமூகத்தின் குரல்” எனும் நேரலை உரை நிகழ்ச்சி.

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் விழுதுகள்: சமூகத்தின் குரல் நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 மணிக்கு, தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோ வழியாகவும், மறு ஒளிபரப்பை மறுநாள் காலை 9.30 மணிக்கும் கண்டு களிக்கலாம்.

வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கங்களை எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து பார்த்து மகிழலாம்.

#TamilSchoolmychoice

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய நடுநிலையாளர்கள், தொகுப்பாளர்களின் விவரங்களை இங்கே காணலாம்:

ஆஸ்ட்ரோ விழுதுகள் தொகுப்பாளர்கள் :

குணசீலன் சிவகுமார்
அகல்யா மணியம்
கபில் கணேசன்
ரேவதி மாரியப்பன்
செல்வகுமாரி செல்வராஜூ
ஸ்ரீகுமரன் முனுசாமி