Home One Line P1 அன்வாருக்கு பெரும்பான்மை இருக்க வாய்ப்பில்லை!- மகாதீர்

அன்வாருக்கு பெரும்பான்மை இருக்க வாய்ப்பில்லை!- மகாதீர்

432
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வலுவான ஆதரவு இருப்பதாக நம்பவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

“ஆரம்பத்தில் இருந்தே அன்வார் தனக்கு வலுவான ஆதரவு கிடைத்ததாகக் கூறிவருகிறார் , ​​நான் நம்பவில்லை.

“அவர் முன்பும் இதைத்தான் செய்தார்.

#TamilSchoolmychoice

“இருப்பினும், மாமன்னர் ஒவ்வொருவரையும் பிரதமரைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகக் கூறியபோது, ​​அவர் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற முடியும் என்று கூறினார், ஆனால், எதுவும் இல்லை.

“இப்போது கூட இது ஒருபோதும் இருக்காது” என்று மகாதீர் கூறினார்.

அரசாங்கத்தை வழிநடத்தும் போது மகாதீர் முகமட் அன்வாரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக உறுதியளித்திருந்தார்.