245 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 12,259- ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் பக்கத்தின் வழி நேரலையாக ஒளிபரப்பான இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மொத்தம் 6,323 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 99 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 31 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று புதிதாக 6 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மரணங்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
Comments