Home One Line P1 மகாதீருடன் பணியாற்றியதில் வருத்தப்படுகிறேன்!- ராம்கர்பால்

மகாதீருடன் பணியாற்றியதில் வருத்தப்படுகிறேன்!- ராம்கர்பால்

566
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மூன்றாவது முறையாக நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்துவதற்கான திட்டத்திற்கு எதிராக ராம் கர்பால் சிங் இன்று கடுமையான விமர்சனங்களை எழுப்பினார்.

கடந்த காலங்களில் மகாதீரின் நடவடிக்கைதான் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரருமான அவர் குற்றம் சாட்டினார்.

#TamilSchoolmychoice

“உங்களுடன் பணியாற்றியதில் நான் வருந்துகிறேன். இந்த நாடு இது போன்ற சூழ்நிலையில் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம். இந்த நாட்டிற்கு சீர்திருத்தம் தேவைப்படுவதற்கான காரணம் நீங்கள்தான்.

“இன்று நீங்கள் ‘நாட்டைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று சொல்கிறீர்கள்? அதைச் செய்யக்கூடிய கடைசி நபர் நீங்களாகத்தான் இருந்தீர்கள்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், நம்பிக்கைக் கூட்டணி தலைமையுடனும், அவருக்குப் பதிலாக அன்வாருக்கு அவர் அளித்த வாக்குறுதி குறித்து விவாதிக்காமல், மகாதீர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏன் பதவி விலகினார் என ராம் கர்பால் கேள்வி எழுப்பினார்.

“அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அப்போது அவருக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறப்பட்டதால் அவர் இதைச் சொன்னார். அவர் தனது அரசாங்கத்துடனோ அல்லது அமைச்சரவையுடனோ பேச்சுவார்த்தை நடத்துவதில் அக்கறை காட்டவில்லை. அதை அவர் தனது சொந்த வழியில் செய்தார்.

“இப்போது அவர் மீண்டும் பிரதமராக விரும்புகிறார். ஒரு மலேசியராக நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன், வேறு யாரும் இல்லையா?

“அன்வாரிடம் பதவியை ஒப்படைப்பதாக நாட்டிற்கு வாக்குறுதியளித்த அதே நபரை நாங்கள் நியமிப்போமா?

ராம் கர்பால் மகாதீரின் கடந்த கால நடவடிக்கைகளையும், குறிப்பாக பிரதமராக இருந்த காலத்தில், அரசாங்க விமர்சகர்களை கைது செய்வது உட்பட கேள்வி எழுப்பினார்.