Home One Line P1 மொகிதின் – மந்திரி பெசார்கள் – முதலமைச்சர்கள் சந்திப்பு இரத்து

மொகிதின் – மந்திரி பெசார்கள் – முதலமைச்சர்கள் சந்திப்பு இரத்து

639
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : மாமன்னர் ஒப்புதலுடன் நாட்டில் அவசர காலத்தைப் பிரகடனப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மொகிதின் யாசின் நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 26) அனைத்து மாநில மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் புத்ரா ஜெயாவில் சந்திப்பார் என முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்தச் சந்திப்புக் கூட்டம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியும், பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமுவும் நாளைய கூட்டத்திற்கான அழைப்பைப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியிருந்தனர்.

#TamilSchoolmychoice

ஆனால் தற்போது அந்தக் கூட்டம் இரத்து செய்யப்பட்டிருக்கிறது.