Home One Line P1 கொவிட்19: 6 பேர் மரணம்- 1,009 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: 6 பேர் மரணம்- 1,009 சம்பவங்கள் பதிவு

571
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,009 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

இதில் உள்ளூர் தொற்றுகள் 1,000 சம்பவங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் 9 பேருக்கு தொற்றுக் கண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 36,434 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

564 தொற்றுகளுடன் அதிக தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சபா இருந்து வருகிறது. சிலாங்கூரில் 180 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இன்று 839 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இதனிடையே, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 25,654– ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 10,503 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 78 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 28 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.