Home One Line P1 கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,041 – மரணங்கள் 3

கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,041 – மரணங்கள் 3

701
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில் 1,041  புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் மட்டும் 1,039 ஆகும். வெளிநாட்டிலிருந்து 2 தொற்றுகள் பீடிக்கப்பட்டிருக்கிறன.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 53,679 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

சிலாங்கூரை விட சபாவில் அதிகமான தொற்றுகள்

சிலாங்கூரில் மட்டும் மிக அதிகமான அளவில் 402 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது சபாவை விட அதிகமாகும். சபாவில் 346 தொற்றுகள் மட்டுமே பதிவாயின.

#TamilSchoolmychoice

அதற்கு அடுத்த நிலையில் நெகிரி செம்பிலானில் 121 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

இன்று 1,405 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 40,493-ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 12,854 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 108 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 45 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று மூவர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 332-ஆக உயர்ந்துள்ளது.